சிவகங்கையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில், 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 42 ஜோடி மாடுகளும், குதிரை வண்டி பந்தயத்தில் பத்து வண்டிகளும் பங்கேற்றன.


சிவகங்கை அருகே அழகு மெய்ஞானபுரத்தில் மூன்றாம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை -தொண்டி சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெரியமாடு, சிறியமாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டி எல்லை பந்தயமும் குதிரை வண்டி பந்தையமும் நடைபெற்றது. மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 16 ஜோடிகளும், பூஞ்சிட்டுப் பதிவில் 16 ஜோடிகள் என மொத்தம் 42 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

முதலாவதாக நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் பெரியமாடுகளுக்கான எல்கையாக 8 மைல் தூரமும், சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு பிரிவிற்கு 5 மைல் தூரமும் பந்தய எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியை ஆர்.கே. திலகர்கண்ணப்பன் கொடியை சேர்த்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சேதுராமன் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர், ஆர்.கோவிந்தன் திமுக ஒன்றிய கவுன்சிலர், ஸ்டீபன் காளையார் கோயில் அதிமுக ஒன்றிய செயலாளர் ,தனசேகரன் ஒன்றிய அமைப்பாளர், சக்தி, பாண்டியராஜன் சந்தானம், ராமன், வந்தவாசி கே. தங்கச்செல்வம் விழாவில் கலந்து கொண்டனர். இந்த பந்தையத்திர்க்கு சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 42ஜோடி மாடுகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்று ஒன்றை ஒன்று முந்தி சென்றன.


முதல் 5 இடங்களை பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பையும் ரொக்க பரிசம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 10 வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் சிவகங்கை, வாணியங்குடி, அழகுமெய்ஞ்ஞானபுரம், ரோஸ்நகர், பையூர் கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.
