சிவகங்கையில் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் துவக்கி வைத்தனர். சிவகங்கை நகர் 26 & 27வது வார்டு இந்திரா நகரில் சிறுவர் விளையாட்டு பூங்காவிற்கான அடிக்கல் நாட்டு விழாவினை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தனர்.
அப்போது உடன் நகராட்சி மேலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், மதியழகன், ராமதாஸ், மற்றும் வட்ட பிரதிநிதி RD சேகர், மகேந்திரன், கணேசன் மற்றும் மகளிர் அணி ராஜேஸ்வரி சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணி சதீஷ்குமார், நகர்மன்ற தகவல் தொழில் நுட்ப அணி கார்த்திகேயன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் மற்றும் 26 & 27 வார்டு பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
