ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 1,75,000 கன அடியாக உயர்வு.
1,40,000 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் மேலும் 35 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது.
காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
கர்நாடக அணைகளில் இருந்து, சுமார் 2.5 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேலும், நீர்வரத்து உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.