• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் மனிதநேய மக்கள் கட்சி மதுவை கொட்டி கண்டன ஆர்பாட்டம்

BySeenu

Jul 3, 2024

கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மனிதநேய மக்கள் கட்சி மக்கள் மதுக் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி கோவை மத்திய மாவட்டத்தின் சார்பாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக தமிழக முழுவதும் ஜூலை இரண்டாம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மக்கள் திறள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பதாகைகள் ஏந்தி ,மதுவை கீழே ஊற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், இதில் சிறப்புரையாற்றிய பழனி ஃபாருக் மனிதநேய மக்கள் கட்சி தலைமை கழக பேச்சாளர்,
அக்பர் அவர்கள் மமக மாநில பிரதிநிதி, மமக மாவட்ட தலைவர் சர்புதீன்,
தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப்பு ரஹ்மான், மமக மாவட்ட துணை தலைவர் டிஎம்எஸ் அப்பாஸ், ஆகியோர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.