ராகுல்காந்தி இந்துக்களை எதிர்க்கவில்லை. இந்துத்துவாவை தான் எதிர்த்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கன்னி பேச்சை பேசிவிட்டு குமரி மாவட்டம் வருகை தந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட்டிற்கு தமிழக கேரள கேரள எல்லையான களியக்காவிளையில் காங்கிரசார் செண்டை , சிங்காரி மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தாரகை கட்பட் கூறியதாவது..,
கள்ளக்குறிச்சி சம்பவம் நடக்க கூடாத மோசமான சம்பவம் காங்கிரஸ் , கூட்டணி கட்சி முதல்வர் உட்பட அனைவரும் துயரமான சம்பவமாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெளிவாக கூறி இருக்கிறார். அதிமுக ஆட்சியிலும் அங்கு கள்ளசாராயம் காய்ச்சி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
காங்கிரஸ் கொள்கை பூரண மதுவிலக்கு. ஆனால் அரசு உடனடியாக மதுவிலக்கை கொண்டு வந்தால் பக்கத்தில் இருக்கும் கேரளாவில் போய் மதுபிரியர்கள் வாங்குவார்கள். பாண்டிச்சேரியில் போய் மது வாங்குவார்கள். இதனால் அண்டை மாநிலங்களுக்கு வருவாய் கூடும். நான் அதற்காக நியபடுத்தவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மது கடைகளை மூட தமிழக அரசிடம் திட்டம் இருக்கிறது. காங்கிரஸ் கள்ளுகடைகளை திறக்க கேட்டிருக்கிறோம். பூரண மது விலக்கு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை.
அண்ணாமலை சொல்வதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரை வெளிநாட்டிற்கு தப்பிக்க வைத்தது யார் பாஜக இதில் இருந்து மதுவை ஆதரிப்பது மத்திய அரசா? மாநில அரசா? என்பதை நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.
கனிமொழி கூறியது போல படிபடியாக மது விலக்கு கொண்டு வருவதன் மூலம் தமிழகத்தில் இளம் விதவைகள் எண்ணிக்கை குறையும்.
இனிமேல் திமுக வின் அடிமை காங்கிரஸ் என்று கூறினால், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து எதிர்ப்பு குரல் ஒலிக்கும். அது என் குரலாகதான் முதலாவதாக இருக்கும். அண்ணாமலை அவர்களிடம் நாவை அடக்க சொல்லுங்கள். அண்ணாமலை ஐபிஎஸ் வெற்றி பெற்றாரா? அதற்கு பிறகு அரசியல் பேசட்டும் அவர்..,
ராகுல்காந்தி இந்துக்களின் மனதை புண்படுத்த வில்லை. ஆர். எஸ். எஸ். பி.ஜே.பி இந்துத்துவாவை வைத்து அரசியல் செய்பவர்களை பற்றியே ராகுல்காந்தி பேசினார். இது வரை எதற்காகவும் விளக்கம் கொடுக்காத மோடி ராகுல் காந்தி பேசியதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார் என்றால், அவர் முகத்தில் பயம் தெரிகிறது பத்து ஆண்டுகளில் என்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பாராளுமன்றத்தில் என்று பேசினார். தினம் தோறும் ராகுல் காந்தியை எதிர் எதிரில் பாராளுமன்றத்தில் சந்திக்க முடியாமல் தவிக்கிறார். மோடி நேர்மையின் அடையாளம் ராகுல் பெய்யின் அடையாளம் மோடி 2026க்கு உள் இண்டியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் படிப்பறிவு இல்லாத பிரதமர் கையில் தேர்தல் ஆணையம் இருந்த காரணத்தால் விவேகானந்த பாறையில் அவரது தேர்தல் நடக்கும் போது தியானம் செய்தார். இது எப்படி அனுமதிக்கலாம் தமிழக தேர்தல் முடிந்த பிறகுதான் முதல்வர் கொடைகானல் சென்றார் மோடி தேர்தல் நடக்கும்போது இங்கு தியானம் செய்ய அனுமதி கொடுத்தது யார் கேமராக்களோடு தியானம் செய்தார். காங்கிரசோ, ராகுல் காந்தியோ மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் மீது குற்றசாட்டு வைக்கவில்லை என்றும் பேட்டியின் போது, விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார்.








