2024 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடந்த கொண்டாட்டத்தில் ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டங்கள் அரங்கேறின. வாலாங்குளம் பகுதியில் வாலிபர்கள் குவிந்து குத்தாட்டம் போட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வாலிபர்கள் அடித்துக்கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர். அதில் ஒருவரை கீழே தள்ளிவிட்டு மூக்கில் உதைத்தனர். இதனால் மூக்கு உடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். இதில் சண்டையிட்டர்வகள் விவரம், ஏன் சண்டையிட்டார்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. தற்போது அந்த இளைஞர்கள் சண்டையிட்ட வீடியோ வெளியாகியிருக்கின்றன .