சிவகங்கையில் இயங்கி வரும் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒன்றினைந்து கடும் மழையால் தங்களது உடைமைகளை இழந்து பெரும் துயரத்தில் இருக்கும் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மக்களுக்காக மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு மற்றும் அத்தியாவசிய தேவை பொருள்களை பள்ளி செயலாளர் சேகர் அவர்களிடம் மாணவ, மாணவியின் வழங்கினார்கள் தானாக முன்வந்து தங்களால் இயன்ற அளவு உதவி பொருள்களை வழங்கிய மாணவர்களின் இந்த செயலை பள்ளி செயலாளர் பாராட்டி அவர்கள் வழங்கிய நிவாரண பொருள்களை சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலானது தற்போது படிக்கும் பள்ளி மாணவ மாணவியர்களிடையே உதவும் மனப்பான்மையை வளர்க்கும் விதமாக அமையும் என்பது எவ்வித ஐயமில்லை.
