சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும், அமைச்சர் பதவியையும் பொன்முடி இழந்ததாக சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், தற்போதைக்கு சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.