• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம்…

ByKalamegam Viswanathan

Oct 29, 2023

சோழவந்தான் எம். வி. எம். மருது மகாலில் வட்டார சுகாதார பேரவை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத், வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருது பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் விழாவினை தொகுத்து வழங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் தென்கரை மஞ்சுளா ஐயப்பன், மன்னாடிமங்கலம் பவுன்முருகன், காடுபட்டி ஆனந்தன், குருவித்துறை ரம்யா நம்பிராஜன், இரும்பாடி ஈஸ்வரி பன்னீர்செல்வம், திருவேடகம் பழனியம்மாள் ஆறுமுகம், மேலக்கால் முருகேஸ்வரி வீரபத்திரன் ஆகியோர் பேசினார்கள். இதில் கலந்து கொண்ட வட்டார குழந்தைகள் அலுவலர் கண் மருத்துவர் மக்களை தேடி மருத்துவம் கிராம சுகாதார பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் உட்பட இப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வட்டார அளவிலான சுகாதார ஆலோசனைகள் எடுத்துக் கூறி பேசினார்கள். கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் இதற்கான திட்டங்களுக்கு ஆதரவு அளித்து செயல்படுத்துவதாக பேசினார்கள். ஊராட்சி செயலாளர்கள் முனியராஜ், விக்னேஷ், மனோபாரதி, திருச்செந்தில், ஒய்யனன், சுதாப்பிரியா, செல்வம் வேலன், செல்வம், முத்துவேலம்மாள், காசிராஜன், முனியாண்டி, கதிரேசன் சுகாதார ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், சதீஷ்பிரபாகரன், குமார் மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், டெங்கு பணியாளர் தங்கப்பாண்டி உள்பட வட்டார சுகாதார தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். பணியாளர் பிரகதீஸ்வரர் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் செய்திருந்தார்.