• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம்

ByKalamegam Viswanathan

Jul 17, 2023

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள சரவணப்பொய்கையில் ஆடி மாத அமாவாசை பிதுர் தர்ப்பணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் இறந்த தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனால் சரவணப் பொய்கை வளாகத்தில் ஏராளமானவர்கள் கூடியுள்ளனர்.