• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மரக்காணத்தில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல

ByA.Tamilselvan

May 16, 2023

தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை குடித்ததாலே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.எந்தத் தொழிற்சாலையிலிருந்த மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது, அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்று புலன் விசாரணை நடந்து வருகிறது.மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல; அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் ஆகும் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுவது தடுக்கப்பட்டதால் தொழிற்சாலையில் இருந்து மெத்தனாலை திருடி விற்கப்பட்டதாக தமிழக டிஜிபி விளக்கம்.