• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள பள்ளிவாசலுக்கு சென்ற கேரள பயணி மாரடைப்பால் மரணம்

ByKalamegam Viswanathan

Apr 25, 2023

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் அவுலியா பள்ளிவாசலுக்கு சென்ற கேரள பயணி மாரடைப்பால் மரணம் இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மேல் சிக்கந்தரவுலியா பள்ளிவாசல் உள்ளது இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி செல்கின்றனர் இந்நிலையில் இன்று காலை கேரளா மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் புரண்கு பகுதியை சேர்ந்த முகம்மது (வயது 60)என்பவர் மலைக்கு சென்றுகொண்டிருந்த போது திடிரென மயங்கி விழுந்தார்.
அருகில் உள்ளவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து திருப்பரங்குன்றம் அரசு மருத்துவ மனை கொண்டு சென்றனர். மருந்துவர்கள் முகம்மது இறந்ததா கூறவே அவரது உடல் கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை..