மதுரை மாவட்டம் சோழவந்தானில். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள்30 நாட்கள் நோன்பிருந்து இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வரும் நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அதி காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து இங்குள்ள நைனா முகமது பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர் இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான சிறுவர்கள் உட்பட இஸ்லாமியர்கள் தரையில் அமர்ந்து ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர் தொழுகை முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்…