விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மின்னல் காரணமாக பேய்மலை மொட்டை வனப் பகுதியில் திடீர் காட்டுத்தீ பரவிவருகிறது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகமாகவும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டு எருமை, காட்டு பன்றி, புள்ளி மான், சருகு மான், மிளா உள்ளிட்ட வன விலங்குகள் ஏராளமாக உள்ளன. மேலும் இந்த வனப் பகுதி சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த வனப் பகுதியை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மேற்கு மலைத் தொடர்ச்சியில், கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்து, 500 மீட்டர் உயரமுள்ள பேய்மலை மொட்டை வனப் பகுதியில், வனத்துறை அதிகாரிகளின் வயர்லெஸ் வாக்கிடாக்கி கருவிகள் பயன்பாட்டிற்காக டவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டவரின் மூலமாக கிடைக்கும் சிக்னல்களை கொண்டு தான், மேகமலை புலிகள் காப்பகம் மற்றும் சாம்பல் நிற அணில்கள் சரணாலய பாதுகாப்பு பணிகளில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் , பேய்மலை மொட்டை வனப் பகுதியில் கடுமையான மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த மின்னல் காரணமாக பேய்மலை மொட்டை வனப் பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டு, வனப்பகுதி பற்றி எரியத் துவங்கியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் காட்டுத்தீ எரியும் பகுதிக்கு தீயை கட்டுப்படுத்தி அணைப்பதற்காக சென்றுள்ளனர். வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாக்கிடாக்கி வயர்லெஸ் டவர் கோபுரத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. வயர்லெஸ் டவர் கோபுரத்திற்கு காட்டுத்தீயினால் பாதிப்பு ஏற்பட்டால், வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தி வரும் வாக்கிடாக்கி கருவிகள் முற்றிலும் செயல் இழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]