• Fri. May 3rd, 2024

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு.., மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்..!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி தொடங்கி, நேற்று (ஏப்ரல் 3) முடிவடைந்ததைத் தொடர்ந்து மாணவிகள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 101 தேர்வு மையங்களில் 21 ஆயிரத்து 543 மாணவ மாணவிகள் எழுதினர். இதையடுத்து பனிரெண்டாம் வகுப்பு அனைத்து பாடப் பிரிவினருக்கும் தேர்வுகள் முடிந்ததால் பள்ளி மாணவ மாணவிகள் தேர்வை எழுதி முடித்து பள்ளியை விட்டு வெளியே வந்து தேர்வு முடிந்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு வண்ணங்களை நண்பர்கள் முகத்தில் மாறி மாறி பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து திருவிக வீதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு முடித்த சில மாணவிகள் முட்டையை வீசியும் வினாத்தாள் மற்றும் பேப்பரை ஆகியவற்றை கிழித்து தூக்கி வீசியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *