மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இவற்றை கடநத்தி செல்லும்போது போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் வகத்து மலை மஞ்ச மலை பகுதிகள் உள்ளன இங்கு சந்தன மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் உள்ளன இந்த பகுதியில் வளர்ந்துள்ள சந்தன மரங்களை சில நபர்கள் அடிக்கடி கடத்தி வருவதாக அடிக்கடி போலீசாருக்கு தகவல் வந்தது இதை தடுக்க போலீசாரும் அவ்வப்போது தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் நேற்று பாலமேடு போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்த போது முண்ணுக்கு பின் முரணாக தகவலை கூறினர் பின்னர் அவர்களை சோதனையிட்டபோதுஏழு சந்தன மரக்கட்டைகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது விசாரணையில் அவர்கள் நத்தம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்த ஆறுமுகம் வயது 40 அதே ஊரைச் சேர்ந்த கொட்டப்பாக்கம் வயது 36 என்பது தெரிந்து அவர்களை கைது செய்தனர் பின்னர் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் மேலும் அவர்களுடன் வந்து தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்..