• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம் உதகை கிழக்கு மண்டல் தும்மனாடா கிராமத்தில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.


இம்முகாமில் ஊரத்தலைவர் B. மணிகூசூ தலைமை தாங்கினார். கிழக்கு மண்டல விவசாய அணி பொது செயலாளர் . சிவா ஜி முன்னிலை வகித்தார். தும்மனாடா கிராம துணைத்தலைவர் . சிவன் மற்றும் பொருளாளர் மூர்த்தி மேற்பார்வையில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் நலத் திட்டங்கள் பிரிவு நீலகிரி மாவட்டத் தலைவர் .Dr .R.தேவகுமார் சிறப்புரை ஆற்றினார். இதில் மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அனைவரும் பங்கேற்று அவர்களின் குறைகள் மற்றும் சந்தேகங்களை கூறினார்கள்.