• Sun. May 10th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

சென்னை கேகே நகரில் பதஞ்சலி யோகா சார்பில் பொங்கல் விழா

Byஜெ.துரை

Jan 13, 2023

சென்னை கேகே நகரில் பதஞ்சலி என்னும் யோகா குழுவினர் சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மண் பானையில் பொங்கல் வைத்தும் குத்துவிளக்கு ஏற்றியும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடினர்.


சென்னை கேகே நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் பதஞ்சலி என்னும் யோகா குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக யோகாவை கற்றுத் தருகின்றனர். இந்த யோகா குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மண் பானையில் பொங்கல் வைத்தும் குத்துவிளக்கு ஏற்றியும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடினர்.
மாணவர்களின் சிலம்பாட்டம் மற்றும் நடனம் பெண்களின் கும்மியாட்டம், விவசாயிகள் பெருமையை போற்றி விவசாயிகள் வேடமிட்டு நடனமாடி அசத்தி இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இந்த விழாவை அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டுவந்துகண்டுகளித்தனர்..