• Thu. Apr 25th, 2024

இந்தியா – இலங்கை இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து…!

Byகாயத்ரி

Mar 30, 2022

இந்தியா – இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இலங்கை கடல் துறை அமைச்சருடன் நேற்று இந்திய வெளியே துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தமிழர்கள் நலன் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா – இலங்கை இடையே யாழ்ப்பாணத்தையொட்டி உள்ள 3 தீவுகளில் மின்சாரம் உள்ளிட்ட 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. யாழ்ப்பாணத்தை ஒட்டி உள்ள மூன்று தீவுகளில் மின்சாரத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தாகியுள்ளது. இந்தியா- இலங்கைக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *