• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மான் கறி வைத்திருந்த 5 பேர் கைது…, தலா ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு….

ByRadhakrishnan Thangaraj

Jun 20, 2025

ராஜபாளையம் அருகே மான் கறி வைத்திருந்த 5 பேரை வனத்துறையினர் கைது செய்து, தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தில் மான் கறி வைத்திருந்த 5 பேரை கைது செய்த வனத்துறையினர், தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் ரங்கர் தீர்த்தம் வீட்டிற்கு உட்பட்ட பூவாணி பகுதியில் நாய்கள் கடித்து காயமடைந்த புள்ளி மானை ராஜபாளையத்தைச் சேர்ந்த சிலர் கொண்டு சென்றதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் உத்தரவின் பேரில் வனத்துறையினர் விசாரித்ததில் பன்னீர் ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த சிலர் மானை கொண்டு சென்றது தெரியவந்தது. ராஜபாளையம் வனச்சரகர் கார்த்திகேயன் தலைமை வனத்துறையினர் கணபதிசுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்த 5 பேரை பிடித்து தலா ரூ.15 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தனர்.