கரூர் அருகே மாயனூரில் காவிரி ஆற்றின் நீரில் மூழ்கி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை அடியே பிலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் குடியரசு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர். விளையாட்டு போட்டி நிறைவடைந்ததும் இன்று இன்று மதியம் மாயனூர் கதவணை பகுதிக்கு சுற்றி பார்க்க வந்துள்ளனர். மாயனூர் கதவணை அருகே உள்ளது செல்லாண்டியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின் அங்குள்ள காவிரி ஆற்றில் மாணவிகள் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது காவிரி ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற நீச்சல் தெரியாத மாணவி ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.அதனைக் கண்டு சக மாணவிகள் அவரை காப்பாற்ற முயன்ற போது அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை எடுத்து செய்வதறியாத மாணவிகள், ஆசிரியர்களும் செய்வதறியாது அருகில் உள்ள பொதுமக்கள் இதுகுறித்து கரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் படகின் மூலம் நீரில் மூழ்கிய நான்கு பேரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் நான்கு பேரும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து சடலமாக மீட்கப்பட்டனர். இறந்தவர்கள் அப்பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவி தமிழரசி, ஏழாம் வகுப்பு மாணவி சோபியா, ஆறாம் வகுப்பு மாணவிகள் இனியா லாவண்யா என்பது தெரிய வந்தது. நான்கு பேரின் உடல்களை மீட்ட மாயனூர் போலீசார் கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மற்றும் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேட்டி அளிக்கையில்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே தனியார் கல்லூரியில் குடியரசு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கு பெறுவதற்காக வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாயனூர் காவிரி ஆற்று பகுதிகளில் ஆழமான பகுதிகள் என எச்சரிக்கை பலகையில் வைத்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் நீரின் ஆழமான பகுதிக்கு குளிக்க செல்கிறார்கள் எனவும் அதனை வருங்காலங்களில் தவிர்க்க வேண்டும் எனவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழக முதல்வருக்கு அறிக்கை அளிக்கப்பட உள்ளதாகவும், அதன் மூலம் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் நிவாரணம் அளிக்க வழிவகை செய்வதாகவும் கூறினார்.
மேலும் ஆற்றில் குளிக்க சென்ற மாணவிகளின் சுமார் ஏழு பேர் நீரில் மூழ்கியதாகவும் நீச்சல் தெரிந்த கீர்த்தனா என்ற மாணவி மூன்று மாணவிகளை காப்பாற்றிய நிலையில் நான்கு மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிருத்திகா என்ற மாணவி 3 மாணவிகளை |காப்பாற்ற வில்லை எனில் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்க கூடும்.
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]
- சோழவந்தானில் குடிநீர் குழாய் வரிசெலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்சோழவந்தானில் குடிநீர் குழாய் வரி செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுமதுரை மாவட்டம் […]
- தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள், தொழில் தொடங்குங்கள் -தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்புமதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் zohoநிறுவனத்தின் தலைவர் இந்திய தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்பு இந்தியர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கி […]
- சிவகாசி குடிநீர் ஆதாரமான அணை பகுதியில், மேயர் தலைமையில் திடீர் ஆய்வுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை.கோடை காலம் துவங்கியுள்ள […]
- திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு-மனித உரிமை ஆணையம் விசாரணைரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் […]
- சிவகாசி அருகே, முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைதுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள வெம்பக்கோட்டை – வனலிங்கபுரம் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில், […]
- மதுரை தோடனேரியில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை […]
- கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியதுஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது.கடந்த 2019ம் ஆண்டு கொரோனா நோய் […]
- ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 30 குடும்பங்களை […]
- எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை -நடிகர் விஜய்சேதுபதி பேட்டிமதுரையில் முதல்வர் ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் […]
- திருப்பங்குன்றம் அருகே பட்டாகத்தியுடன் வந்து புல்லட் பைக் திருடிய திருடர்கள்திருப்பங்குன்றம்அருகே வலையபட்டியில் பட்டாகத்தியுடன் வந்து ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்திருடிய திருடர்கள்..வீடியோ காட்சிகள் வெளியீடுமதுரை மாவட்டம் […]
- ‘மை டியர் டயானா’ இணையத் தொடர் படப்பிடிப்பு துவக்கம்பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு […]
- தமிழகத்தின் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம்- சரத்குமார் பேட்டிதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் அதற்காக கட்சி நிர்வாகத்தை தொடர்ந்து […]
- ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க […]
- பாலியல் தொல்லை பிரபல கல்லூரியில் தொடரும் போராட்டம்..!!மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் […]