காடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் மோசடி செய்த நபரின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
ஏற்கனவே போலி வங்கி ஆரம்பித்து 30 லட்சம் பொதுமக்களை ஏமாற்றிய நிலையில் இரண்டாவதாக தமிழக அளவில் 30 கோடி ரூபாய் ஏமாற்றிய நபர் மீது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி சேபெருமால் வீதி என்ற இடத்தில் குப்புசாமி என்பவருடைய மகன் நாகராஜ் தனது குடும்ப உறுப்பினர்களான அம்மா மணி, அக்கா கோகிலா, மனைவி சத்யா ஆகியோர் பெயரில் கேஎம்கேஎஸ் குளோபல் டிரேடர்ஸ் என்ற நிதி நிறுவனம் தொடங்கியுள்ளார். இதன் மூலம் சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்களிடம் அதிக வட்டி கொடுப்பதாகவும், இரண்டு வருடம் கழித்து முதலீடு தொகை முழுவதும் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து பேராசை மிகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சேலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் ஒரு கோடி வரை அவரிடம் முதலீடு செய்துள்ளனர்.


இதையடுத்து அவர் கடந்த பல மாதங்களாக அனைவருக்கும் முறையாக வட்டி வழங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1ந்தேதியன்று தான் வருமான வரி கட்டுவதாக பெங்களூர் செல்வதாகவும், முதலீடு செய்த அனைவருக்கும் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று சேர வேண்டிய 8 சதவீத வட்டி தவணை தொகை வங்கி கணக்கில் வந்தடையும் என்று வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்து சென்றதாக கூறப்படுகிறது. பின்பு நேற்று வரை யாருடைய கணக்கில் வட்டி பணம் வரவு வராததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்துவிட்டு இன்று அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் நாகராஜ் மீது புகார் கொடுத்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நிதி நிறுவன உரிமையாளரை தேடி வருவது குறிப்பிடத்தக்கதாகும். முற்றுகையிட்டவர்கள் பலபேர் தங்கள் முகம் வெளியில் தெரிய வேண்டாம் என அவசரஅவசரமாக அங்கிருந்து வெளியேறியதால், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்து இருக்கலாம் எனவும், இது மாதிரியான பெண்களை குறிவைத்து மோசடி நபர் ஏமாற்றி இருக்கலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது.
- முக கவசம் அணிந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் – மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருபவர்கள் முகக் கவசம் அணியவில்லை என்றால் மருத்துவமனைக்குள் அனுமதி இல்லை, […]
- மஞ்சூர் பள்ளி மாணவி கட்டுரை போட்டியில் முதலிடம் மாவட்ட ஆட்சியர் பாராட்டுகட்டுரைப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மஞ்சூர் மாணவிக்கு கலெக்டர் பாராட்டுஉதகமண்டலம் NCMS அருகில் […]
- இன்று இந்தியர் ஒருவர் முதல்முதலாக விண்வெளிக்கு சென்ற நாள் -ராகேஷ் சர்மாராகேஷ் சர்மா சோயூஸ் வு-11 விண்கலத்தில் பயணித்து விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் […]
- ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல்-துரை வைகோ பேட்டிராஜபாளையம் அருகே மதிமுக ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் முறம்பில் செயல்படும் தனியார் முதியோர் […]
- திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் வந்திருந்து […]
- தஞ்சாவூரில் நிறுவுவதற்காக கன்னியாகுமரியில் தயாராகும் திருவள்ளூர் சிலைதஞ்சாவூர் தமிழ் தாய் அறக்கட்டளையில் நிறுவுவதற்காக எட்டடி உயர திருவள்ளூர் சிலை மயிலாடியில் தயாராகி வருகிறது.3000 […]
- கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கீழ்குந்தா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது .பள்ளியின் […]
- ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின் கோட்பாடுகள் சரியானது அல்ல -தமிழக ஆய்வாளர் பரபரப்பு தகவல்இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் தமிழ்நாட்டில் ஆராய்ச்சிக்கு அனுமதிக்காக காத்திருக்கும் நீலகிரி விஞ்ஞானி!ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்று […]
- மதுரையில் காரில் இளைஞரை தரதரவென இழுத்து சென்று சாலையில் தூக்கி வீசிய கொடூர சம்பவம்இரு சக்கர வாகனத்தை மோதிய காரை வழிமறித்த இளைஞரை பிடித்து சாலையில் தரதரவென இழுத்துக் கொண்டு […]
- ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி, ஹாட்ஸ்டார் அடுத்த வலைத்தள தொடரை அறிவிப்புஇந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த வலைத்தள தொடரைஅறிவித்துள்ளது.இந்த வலைத்தள தொடரில் […]
- “கன்னி” படத்தில் மண்ணின் பெருமை, தொன்மை, பாரம்பரியம்யாரும் செல்லத் தயங்கும் இடங்களில், யாரும் படப்பிடிப்பு நடத்தத் திணறும் இடங்களில் தேடித் தேடி, படப்பிடிப்பு […]
- கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது. இதில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக […]
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]