• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நாகர்கோவிலில் ஊழல் செய்த வேளாண்துறை பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை.., நீதிமன்றம் தீர்ப்பு…

நாகர்கோவிலில் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் அழைத்து சென்றதாக கணக்கு காட்டி ஊழல் செய்த வேளாண்துறை பெண் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

குமரி லஞ்ச ஒழிப்பு துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் வேளாண்மை அலுவலருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

குமரி மாவட்டத்தை சேர்ந்த வரும் தற்போது நெல்லை மாவட்டத்தில் உதவி வேளாண்மை இயக்குனராக பணிபுரிந்து வரும் ஜாஸ்மின் லதா அரசு பணம் கையாடல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2011 ஆம் ஆண்டு வாக்கில் இணை வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை அலுவலராக பணிபுரித்தவர் நாகர்கோவிலை சேர்ந்த ஜாஸ்மின் லதா.( இவர் நாங்குநேரியில் உதவி வேளாண்மை இயக்குனராக பணிபுரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

நாகர்கோவிலில் இணை வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை அலுவலராக பணிபுரிந்த போது விவசாயிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை அப்போது முறைகேடாக போலியான வாகன எண்களை பயன்படுத்தி சுற்றுலா அழைத்து சென்றதாக கூறி, இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 520 ரூபாய் கையாடல் செய்ததாக அப்போது கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்த ஹெக்டர் தர்மராஜ் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருந்தார். அந்த ரிப்போர்ட் அடிப்படையில் மேல் இடத்தில் இருந்து வழக்கு பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவின் படி அப்போது ஆய்வாளராக பணிபுரிந்த ராபின் ஞானசிங் என்பவரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த அப்போதைய ஆய்வாளர் சால்வின் துரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தார். (தற்போது குமரி லஞ்ச ஒழிப்புத் துறையில் த. ஹெக்டர் தர்மராஜ் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கு கன்னியாகுமரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்து. அந்த வழக்கில் (ஜூலை_31) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அரசு பணத்தை கையாடல் செய்த குற்றச்சாட்டின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை தற்போது வழங்கப்பட்டுள்ளது. அபராதம் தொகை எவ்வளவு என்பதும் மற்றும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. குறிப்பாக நேரடியாக லஞ்சப்பணம் பெறுபவர்களுக்கு மட்டுமே தண்டனை என்று நினைத்திருந்த நிலையில் தற்போது போலியாக கணக்கு எழுதி சுற்றுலாவுக்கு அழைத்து சென்றதாக கூறி போலி வாகன எண்களை குறிப்பிட்டு பணம் கையாடல் செய்ததாக அன்றைய ஆய்வாளரால் அனுப்பப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குமரி மாவட்டம் மட்டும் அல்லது நெல்லை மாவட்டத்திலும், அரசு அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போலியாக பொய் கணக்குகள் எழுதி வருமானத்துக்கு அதிகமாக பணம் கையாடல் செய்தும் லஞ்சம் பெற்று சொத்து சேர்த்து வரும் லஞ்ச வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமையுமா.!?