• Sat. Apr 27th, 2024

3 மாநில தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

ByA.Tamilselvan

Jan 18, 2023

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்க உள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் என அழைக்கப்படும் நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்கள் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தலை சந்திக்க இருக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களிலும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த மூன்று மாநிலங்களின் சட்டசபை பதவி காலம் வருகிற மார்ச் மாதம் முடிவடைய இருப்பதால் பிப்ரவரி மாதம் அதாவது அடுத்த மாதம் இவற்றிற்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று மதியம் 2.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. மேகாலயாவில் மார்ச் 12-ம் தேதியும், திரிபுராவில் மார்ச் 22-ம் தேதியும், நாகாலாந்தில் 12-ம் தேதியும் சட்டசபை பதவி காலம் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *