‘அழகி’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அப்படம் குறித்த தனது நினைவுகளை நடிகர் பார்த்திபன் தனது இணைய பக்கங்களில் பகிர்ந்துள்ளார்..
2002-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உள்ளிட்டோர் பலர் நடித்திருந்த இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் ஃபேர் விருதை வென்றது. படத்துக்கு இசையமைத்திருந்தார் இளையராஜா. இப்படத்தில் இடம்பெற்ற ‘பாட்டுச் சொல்லி’ என்ற பாடலுக்காக சாதனா சார்கம் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார்.
இப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘அழகி’ குறித்த நினைவுகளை நடிகர் பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “அழகி வயது 20!”
ஊரான் காதலை ஊட்டி வளத்தா, தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க…
அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க, அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள் இன்றோடு. (எனக்கோ என்றும் காதல் தாண்டா கவிமனது!) எப்டி^ Bracket^ பண்றதுங்கிறதை கத்துக்கிறதுதான் மைய(ல்) பகுதி of காதல்!
சரி matterக்கு வருவோம்…
அழகிக்கு கிடைத்த பாராட்டு முத்தம் ஒவ்வொன்றும் நண்பர் தங்கரையே சேரும். அவரின் அழகிய கன்னி முயற்சியை திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்து திக்குமுக்காட வைத்தது. காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்-காலத்திற்கும் கொண்டாட காரணம், ஒப்பனையில்லா நிஜத்தன்மை நிறைந்த காதல். எல்லோர் வாழ்விலும் வந்து போன (அ) நொந்து போன காதல் வடு ‘அழகி’!
தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்றளவில் இன்றளவும் இதயத்தை (20) வருட இன்னொரு காரணம் இசை alias இளையராஜா. நந்திதாதாஸும் நந்தியாக தேவையானியும் தேவையா நீ என்றளவில் நானும் (கையாலாகா காதலன்-காதலை தவிர காதலியை காப்பாற்ற ஏதுமற்றவன்) வாழ்ந்திருப்போம்.
சண்முகத்தின் பார்ட் 1, பார்ட் 2 ஆகி இறுதிவரை இணைப்பற்று போனதால், பார்ட் 2 எடுத்தாவது அத்துப்போன காதலை அர்த்தப்படுத்த முயற்சிக்கிறார் தங்கர். ஒரு காவிய தயாரிப்பாளர் சிக்கினால் விரைவில் அழகி 2” என்று பார்த்திபன் கூறியுள்ளார்.
இதே போல இயக்குநர் தங்கர்பச்சான் தனது ட்விட்டர் பதிவில், “தனலட்சுமி-சண்முகத்தின் கதை ‘அழகி’-யாக உருவெடுத்து இருபது ஆண்டுகளுக்கு முன் இன்றைய நாளில்தான் மக்களின் மனங்களில் ஊடுருவினாள்! அழகி வெளியான இன்றைய நாளில் நானே உடன் இருந்து விடிய விடிய ஒட்டிய சுவரொட்டியை தங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.


- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]
- சோழவந்தானில் குடிநீர் குழாய் வரிசெலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்சோழவந்தானில் குடிநீர் குழாய் வரி செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுமதுரை மாவட்டம் […]
- தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள், தொழில் தொடங்குங்கள் -தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்புமதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் zohoநிறுவனத்தின் தலைவர் இந்திய தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்பு இந்தியர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கி […]
- சிவகாசி குடிநீர் ஆதாரமான அணை பகுதியில், மேயர் தலைமையில் திடீர் ஆய்வுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை.கோடை காலம் துவங்கியுள்ள […]
- திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு-மனித உரிமை ஆணையம் விசாரணைரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் […]
- சிவகாசி அருகே, முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைதுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள வெம்பக்கோட்டை – வனலிங்கபுரம் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில், […]
- மதுரை தோடனேரியில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை […]
- கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியதுஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது.கடந்த 2019ம் ஆண்டு கொரோனா நோய் […]
- ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 30 குடும்பங்களை […]
- எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை -நடிகர் விஜய்சேதுபதி பேட்டிமதுரையில் முதல்வர் ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் […]
- திருப்பங்குன்றம் அருகே பட்டாகத்தியுடன் வந்து புல்லட் பைக் திருடிய திருடர்கள்திருப்பங்குன்றம்அருகே வலையபட்டியில் பட்டாகத்தியுடன் வந்து ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்திருடிய திருடர்கள்..வீடியோ காட்சிகள் வெளியீடுமதுரை மாவட்டம் […]
- ‘மை டியர் டயானா’ இணையத் தொடர் படப்பிடிப்பு துவக்கம்பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு […]
- தமிழகத்தின் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம்- சரத்குமார் பேட்டிதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் அதற்காக கட்சி நிர்வாகத்தை தொடர்ந்து […]
- ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க […]
- பாலியல் தொல்லை பிரபல கல்லூரியில் தொடரும் போராட்டம்..!!மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் […]