• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

2 இளம் பெண்கள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..,

மத்திய அரசு மகாத்மா காந்தியின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலிருந்து தேசத்தந்தை யின் பெயரை நீக்கியதை கண்டித்தும் பெண்கள் காங்கிரஸில் இணைய வேண்டும் என்று நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் நூருல் இமு .மற்றும் அப்சீனா ஆகிய 2 பேர்  ஊட்டியில் இருந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணியை தொடங்கினார்.

கன்னியாகுமரி வந்தனர். பின்னர் கன்னியாகுமரியிலிருந்து. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ,உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் வழியாக அடுத்த மாதம் சென்னை சென்றடைகிறது.

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இந்த பேரணியை முடித்து வைக்கிறார் மேலும் இந்த பேரணிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தும் அனைத்து செலவுகளைபொறுப்பேற்றுக் கொண்டார் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்க்கு பெண் காங்கிரஸ் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.