இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் (Marion Biotech) என்ற நிறுவனம் தயரித்த இருமல் மருந்ததான டாக்-1 மேக்ஸ் என்ற சிரப்பை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெஸ்கிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆய்வக பரிசோதனையில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருமல் மருந்தில் இருந்ததாகவும், இந்த மருந்துகள் மருத்துவர்கள் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது