• Fri. Mar 29th, 2024

மதுரையில் பீஸ் நிக்கா மேட்ரிமோனி சார்பில் 16ஆம் நிக்காஹ் சுயம்வரம் நிகழ்ச்சி

Byp Kumar

Apr 30, 2023

மதுரையில் அண்ணா நகர் பகுதியில் தனியார் திருமண அரங்கத்தில் பீஸ் நிக்காஹ்மேட்ரிமோனி சார்பில் 16ம் நிக்காஹ் சுயவரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பீஸ் அமைப்பின் நிறுவனர் முகமதுபாரூக் தலைமையிலும்சிறப்பு அழைப்பாளராக அரசு ஹாஜி மௌலவி சையதுஹாஜாமுயீனுத்தீன்ஆலிம் கலந்து கொண்டார்இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் ஆண், பெண் இருவீட்டாரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் முகமதுபாரூக்கூறியது பீஸ் அமைப்பானது 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இதனின் நோக்கம் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் வரதட்சணை அறவே ஒழிக்கப்பட வேண்டும் எனவும் இன்று ஏழாம் ஆண்டு துவக்க விழாவில் இதுவரை 9,250 நிக்காஹ் முடித்து வைத்துள்ளோம் இன்று 16 வது சுயம்வரம் நிகழ்ச்சியில் நடத்தியுள்ளோம் முதல்மனம் முதல் மறுமணம் வரை செய்து வைத்துள்ளோம் பெண் குடும்பத்தார் நான் குடும்பத்தார் இருவரையும் நேரே வைத்து உண்மைகளை எடுத்துக்கூறி நிக்காஹ் செய்துள்ளோம்.


இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்ட மக்களும் கலந்து கொண்டுள்ளனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண் பெண் இருவர் இடமும் 23 கேள்விகள் கேட்கப்பட்டு உண்மை அறிந்து கொண்டு நேரடியாக பேசி நிக்காஹ் முடிவு செய்யப்பட்டுள்ளது இன்று 400 முதல் 500 வரைஇந்த அமைப்பின் மூலம் வரதட்சணை அறவே ஒழிக்கப்பட வேண்டும் நேத்திரர்கள் தலையீடு இருக்கக்கூடாதுஎனவும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் என அனைவருக்கும் சேவை மனப்பான்மையில் செய்து வருகிறோம் எனக் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *