• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சுயேச்சை எம்எல்ஏ-விடம் 15 லட்சம் ரூபாய் மோசடி!..

By

Aug 23, 2021

புதுச்சேரி சுயச்சை எம்எல்ஏ அங்காளனிடம் 15 லட்சம் மோசடி செய்ததாக புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே இரண்டாம் தேதி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வெற்றி பெற்றது. மேலும் அன்றைய தினத்தில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதன் வரிசையில் நம் அண்டை மாநிலம், யூனியன் பிரதேசமாக உள்ளது புதுச்சேரி. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் பெரும்பான்மையை பிடித்து என் ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் சுயேச்சை எம்எல்ஏ வெற்றி பெற்றுள்ளார். அவர் யார் என்றால் அங்காளன். இந்நிலையில் இந்த புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் மோசடி வழக்கு தொடுத்துள்ளார். தன்னிடத்தில் 15 லட்சம் மோசடி செய்ததாக புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்துள்ளார் அங்காளன் .

அந்தப்படி நிலம் வாங்கி பிளாட் போட்டு விற்பனை செய்யலாம் என்று கூறி 15 லட்சம் ரூபாய் வாங்கியதாக புரட்சி பாரதம் நிர்வாகி ரவி மீது புகார் அளித்துள்ளார் அங்காளன்.மேலும் சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் கொடுத்த புகாரின் பேரில் ரவி மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.