இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வராலாறு காணாத உச்சத்தை தினம் தினம் எட்டி வருகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.102.40-ஆகவும், டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து, ரூ.98.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலையும் பல மாநிலங்களில் ரூ.100-ஐ தாண்டி விட்டது. சென்னையிலும் விரைவில் ரூ.100-ஐ எட்டும் எனத் தெரிகிறது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.