குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வேப்பமூடு ஜங்சனில் அமைத்துள்ள நேசமணி நினைவு இல்லத்திலுள்ள மார்ஷல் நேசமணி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்களுடன் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.