• Fri. Mar 29th, 2024

ஹெலிகாப்டர் பிரதர்ஸுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!…

By

Aug 9, 2021

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்து புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்.ஆர். கணேஷ் மற்றும் எம்.ஆர்.சாமிநாதன் ஆகியோரை தனிப்படை போலீசார் கடந்த ஐந்தாம் தேதி கைது செய்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிபதி தரணிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.


கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்து புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்.ஆர். கணேஷ் மற்றும் எம்.ஆர்.சாமிநாதன் ஆகியோரை தனிப்படை போலீசார் கடந்த ஐந்தாம் தேதி கைது செய்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிபதி தரணிதரன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *