• Thu. Mar 28th, 2024

கட்டப்பஞ்சாயத்து கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.

Byadmin

Jul 14, 2021

காவல் துறை இயக்குநர் , தமிழ்நாடு .சி.சைலேந்திரபாபு , அவர்கள் மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார் .

இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் , தென்மண்டல காவல் துறை தலைவர் மற்றும் காவல் ஆணையர் , திருநெல்வேலி மாநகர் , மதுரை , ராமநாதபுரம் , திண்டுக்கல் , திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவர்கள் , மதுரை , விருதுநகர் , திண்டுக்கல் , தேனி , ராமநாதபுரம் , சிவகங்கை , திருநெல்வேலி , தென்காசி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர்களும் கலந்து கொண்டனர் .

தென் மண்டலத்தில் ரவுடிகள் மோதும் சில சம்பவங்கள் நடந்துள்ளன . ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் கடுமையான சட்டங்கள் மூலம் அவர்களை தண்டிக்க ஆலோசனை வழங்கினார் .

ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி , அவர்களுக்கு அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்து . ரவுடிகளை சிறையிலடைக்க அறிவுரை வழங்கினார் .

கட்டப்பஞ்சாயத்து , கந்துவட்டி , கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை தரம்பிரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் .

மதுரை மாநகரில் ஆயுதம் ஏந்திய இருச்சக்கர ரோந்து காவலர்களின் சிறப்பான பணியை பாராட்டினார் . சிறப்பாக பணியாற்றிய ஆயுதம் ஏந்திய காவலர்கள் முதல்நிலை காவலர் மாரிமுத்து , ஆயுதப்படை காவலர் 3123 காக்கரமுத்து , முதல்நிலை காவலர் செந்தில் . ஆயுதப்படை காவலர் 2610 வெங்கடேஸ் பாபு , முதல்நிலை காவலர் சுந்தரமூர்த்தி , ஆயுதப்படை காவலர் கண்ணதாசன் , முதல் நிலை காவல் செல்வக்குமார் . மதுரை மாவட்ட காவல் துறையை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளா முத்துகிருஸ்ணன் , சார்பு ஆய்வாளர் திரு.குமரகுரு , தலைமை காவலர் பாலசுப்பிரமணி , தலைமை காவலர் தார்வின் , தலைமை காவலர் முருகன் , தலைமை காவலர் பிரகாஸ் மற்றும் சார்பு ஆய்வாளர் கே.ஆனந்த் , தலைமை காவலர் ராமர் , தலைமை காவலர் ஆசைத்தம்பி , முதல் நிலை காவலர் பிரகாஸ் மற்றும் காவலர் நாகேஸ்வாரன் ஆகியோருக்கு தலா ரூ 5000

/ வெகுமதி வழங்கி அவர்களது பணியை பாராட்டினார் .

கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிராஜ் குடும்பத்திற்கு உதவி தொகையாக ரூ 50000 / ஐ அவரது மகளிடம் வழங்கினார் .

முன்னதாக மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு வருகை புரிந்த காவல் துறை இயக்குநர் தமிழ்நாடு அவர்களுக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக ஆயுதப்படை காவலர்களின் மரியாதை வழங்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *