

சிவகங்கையில் நகராட்சி பொது சுகாதார துறை, மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில், கொரானா நோய்த் தொற்று தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பங்கேற்று அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளவதை உறுதி செய்யும் விதமாக கூட்டத்தினரிடம் உறுதி மொழியை ஏற்க்க செய்தார். இந்நிகழ்ச்சியில் 100 ற்கும் மேற்பட்ட நகராட்சி, மருத்துவ துறை ஊழியர்கள் பங்கேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

