சிவகங்கை மாவட்டம் சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்த பாரத் லால் என்பவன் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ள தாகவும் அவனிடம் புகைப்படம் எடுக்க வந்த நான்காம் ஆண்டு படிக்கும் சட்டக்கல்லூரி மாணவியை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அதனை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அந்த மாணவியின் தொலைபேசிக்கு அந்த புகைப்படத்தை அனுப்பி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனால் அந்த மாணவி 2 மாதமாக கருவுற்றுள்ளார் சட்ட கல்லூரி மாணவி தனது தாயுடன் சென்று பாரத்லாலிடம் கேட்டபொழுது இருவரையும் விரட்டி விட்டதாகவும் இதனால் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவி புகார் அளித்ததன் பேரில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிய பாரத்லாலை மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.