சமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஏப்ரல் 1 முதல் 7 வரை ஓபர்ஹவுசன் (ஜெர்மனி), பாரிஸ் (பிரான்சு) மற்றும் லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி ஐரோப்பாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தவுள்ளார்.

“ஹை ஆன் யுவன் – லைவ் இன் ஐரோப்பா” என்ற தலைப்பில், ஃபாக்ஸ் (Foxx), நிமா (Nima) மற்றும் ஃபிரேம் (Frame) ஆகியவை யு1 ரிகார்ட்ஸ் உடன் இணைந்து இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றன. ஃபோன்கேர் (Phonecare), அகிலம் (Agilam), கரிகாலா (Karikaala) சொக்கா (Sokka) மற்றும் ஆர்ட் டெகோ பிரஸ் (Art Deco Press) ஸ்பான்சர்களாக உள்ள நிலையில், லண்டனுக்கான மீடியா பார்ட்னராக ஏஜேஎஸ் ஈவென்ட்ஸ் (AJS Events) உள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி ஓபர்ஹவுசனிலும், ஏப்ரல் 2 அன்று பாரிஸிலும், ஏப்ரல் 7 அன்று லண்டனிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும். highonu1.com எனும் பிரத்யேக இணையதளத்தில் டிக்கெட்டுகள் கிடைக்கும்.
ஹரிசரண், திவாகர், ராகுல் நம்பியார், ரஞ்சித், பிரேம்ஜி, சங்கர் மகாதேவன், விஜய் யேசுதாஸ், சாம் விஷால், டிஜே, அஜய் கிருஷ்ணா, எம்.சி.சனா, ஆலாப், ஆண்ட்ரியா ஜெரிமியா, தன்வி ஷா, ரக்ஷிதா, பிரியங்கா, ஹரிப்ரியா, விஷ்ணுபிரியா, அனுஷ்யா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முன்னணி கலைஞர்கள் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து “ஹை ஆன் யுவன்” நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்த யுவன் ஷங்கர் ராஜாவின் பிரபல பாடல்கள் இந்த நிகழ்வுகளின் போது இசைக்கப்பட்டு, பார்வையாளர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் பலர் யுவனின் ரசிகர்களாக இருப்பதால், இந்நாடுகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகள் பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ரசிகர்களுக்கு இசை விருந்தாக இந்த நிகழ்ச்சிகள் அமைவதை உறுதிசெய்ய, விரிவான ஏற்பாடுகளை செய்யபட்டு வருகின்றன. யுவனின் நேரலை நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்கான ரசிகர்களின் நெடுநாள் கனவு இதன் மூலம் நிறைவேற உள்ளது.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]