• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

17- வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் :போக்சோவில் கைது

சென்னை மாங்காடு, வடக்கு மலையம்பாக்கத்தை சேர்ந்தவர் சூர்யா . இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் , சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமி கர்ப்பமாக உள்ளத்தை அறிந்த அவர்களது பெற்றோர் விசாரித்ததில் சூர்யாவிற்கு ஏற்கெனவே வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளதை அறிந்த பெற்றொருக்கு அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து ,மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.