


உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண வைபவம் கோலகலமாக நடைபெற்றது.

மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி தரிசனம் செய்து விருந்து உண்டு , மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது.

பக்தர்களிடம் இருந்து 50 ரூ, 100 ரூபாய் மொய்க்கட்டனமாக பெறப்பட்டது. மேலும் இந்த ஆண்டு QR ஸ்கேனின் மூலம் ஆன்லைன் மூலமாக மொய் செலுத்தி ரசிது பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

