இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த யாஷிகா ஆனந்த் அதை தொடர்ந்து, இவன் தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, நோட்டா, கழுகு 2 போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றிருந்தார்.
இதை தொடர்ந்து விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்குப் பிறகு மக்களிடையே மேலும் பிரபலமாகி விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்து அவரின் நெருங்கிய தோழியையும் இழந்தார். தற்போது மீண்டும் உடல் நலம் தேறி திரும்பி உள்ளார்.
மேலும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை ஷேர் செய்து வந்தார். மேலும் இந்த போட்டோக்களை பார்த்த அவரின் ரசிகர்கள் லைக்குகளைவாரி இறைத்த வண்ணம் உள்ளனர். அவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்கு மட்டுமே இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் அளவுக்கு ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர்.தற்போதும் அதை போல ஒரு போட்டோ ஷூட் செய்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
இந்த போட்டோவில் கருப்பு நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.