திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவியிடம் போலீசார் விசாரணை
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் திருவள்ளுவர் காலனி பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை (வயது 53) இவரது மனைவி அன்னலெஷ்மி (வயது 44)இவர்களுக்கு 2 மகன் திருமணமாகி அருகே வசித்து வருகின்றனர்.சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.மேலும் அமமுக திருப்பரங்குன்றம் பகுதி செயலாளராக உள்ளார்.சர்கரைக்கு வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாகவும் அதனை தொடர்ந்து குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது.
இந்தியிலையில் நேற்று இரவு சர்க்கரை குடிபோதையில் சாப்பிடுவதற்கு உணவு வாங்கி வந்துள்ளதாக தெரிகிறது வீட்டின் வெளியே கயிறு கட்டிலில் படுத்திருந்தபோது மனைவி அன்னலட்சுமி சர்க்கரையின் தலையில் கல்லை போட்டு பின்பு சுடுதண்ணியை ஊற்றி அறிவாலால் வெட்டியுள்ளார். இதனால் சர்க்கரை அலறிய சத்தத்தை கேட்டு மகன்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு உடலை பரிசோதித்த மருத்துவர்கள் சர்க்கரை இறந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்குறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்திருக்கின்றனர் கணவனை கொலை செய்த அன்னலட்சுமி தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்
கணவனை மனைவி கல்லால் அடித்துக் கொலை செய்து கணவனை சரமாரியாக அருவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .