வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மார்த்தாண்டம், கொட்டாரம், மயிலாடி, தோவாளை, செண்பகராமன்புதூர், குலசேகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை நேரத்தில் தொடர் மழை பெய்ததால், பள்ளி செல்லும் குழந்தைகள், மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து குடை பிடித்த படியும், மழையில் நனைந்தும் பள்ளி, கல்லூரிக்கு சென்றனர். மேலும், இந்த மழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.