உலகில் கொரோனா என்கிற வைரஸ் கொடிய நோயாக உருமாற்றம் செய்யப்பட்ட பின் ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப்போனதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உலக சுகாதார மையம் அந்தந்த நாட்டு அரசுகள் மூலம் மக்களுக்கு கூறிவருகிறது இதனை நேர்பட கேட்டு நடக்கும் நகர வாசிகள் நரக வாழ்க்கையையும், கேட்காத கிராமவாசி ஆரோக்கியமாக திடகாத்திரமாக வாழ்க்கையை அனுபவித்து வருகிறான் இவர்களை தங்களின் வாடிக்கையாளர்களாக கொண்ட சினிமா கடந்த இருவருடங்களாக முடங்கியிருந்தது இந்த வருடம் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று நான்கு திரைப்படங்கள் வெளியாகின்றன அவற்றைப் பற்றிய முன்னோட்டம் உங்களுக்காக
- இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த பிரபல நடிகர் சதீஷ் முதல்முறையாக நாயகனாக நடித்துள்ள படம் ‘நாய் சேகர்’. சதீஷ் ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி நடித்துள்ளார். `மெர்சல்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் என்பவர்கள் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்தில் லேப்ரடார் வகை நாய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி வகையில் தயாராகியுள்ள ‘நாய் சேகர்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் ரசிகர்களை சிரிக்க வைக்க வருகிறது
- வயதினருக்கான படமாக
என்ன சொல்ல போகிறாய்
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். டிசம்பர் இறுதி வாரமே திரைக்கு வரவிருந்த இந்தப் படம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கதாநாயகன் அஸ்வின் பேசிய தேவையில்லாத பேச்சுக்கள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.தற்போது சர்ச்சைகள் அனைத்தும் முடிந்த நிலையில் இன்றுவெளியாக உள்ளது.வலிமை’ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அஜித்குமார் (AK) ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அஸ்வின்குமார் ரசிகர்களோ அந்த AK-வுக்கு பதிலாக இந்த AK வருகிறார் என்று வலைதளங்களில் பிரச்சாரம் செய்கின்றனர். இளைஞர்களின் ரசனைக்கு ஏற்பகாதலை மையப்படுத்திஉருவாக்கப்பட்டுள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ ரசிகர்களை என்ன சொல்ல வைக்க போகிறது இன்று மாலை தெரிந்துவிடும்.
3.கார்பன்
விதார்த்தின் 25வது படம் இது. இதேபோல் இதுவரை இரண்டாவது நாயகியாக நடித்துவந்த தன்யா பாலகிருஷ்ணன் தமிழில் முதல்முறையாக நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடித்த `அண்ணாதுரை’ படத்தை இயக்கிய ஸ்ரீனுவாசன் இயக்கியுள்ளார்
நாயகன் காண்கின்ற கனவு நிஜத்திலும் நடக்க, அப்படி நாயகன் தனது தந்தையை பற்றி காணும் கனவு நிஜமாகிறது. இதன்பின் என்ன நடக்க போகிறது என்பதை கதைக்களமாக கொண்ட ‘கார்பன்’ ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கொடுக்கும் என்கிறது படக்குழு.
- பண்டிகை அன்று குடும்பங்களுடன் திரைப்படம் பார்க்க விரும்புபவர்களுக்கான படமாககொம்பு வச்ச சிங்கம்டா
நடிகர் சசிகுமாரின் திரைப் பயணத்தில் ஒரு நடிகனாக பெரிய வெற்றியை கொடுத்த படங்களில் ஒன்று ‘சுந்தரபாண்டியன்’. தமிழகத்தின் கிராம மக்களிடம் குடும்பங்களில் ஒரு உறுப்பினராக சசிகுமாரை ஏற்றுக்கொள்ள வைத்த இந்த படத்தை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர்கள் கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் படமே ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டின் நடித்துள்ளார். அதேபோல் சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தர் குமார் என்பவர் தயாரித்துள்ள இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே தயாராகியது. ஓடிடி வெளியீடு அல்லாமல் திரையரங்க வெளியீட்டுக்காகக் காத்திருந்து பல முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியாக இன்று திரைக்கு வருகிறது சசிகுமாரின் வழக்கமான திரைக்கதை பாணியான கிராமத்து பின்னணியே இதிலும்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கிராமத்து மக்களின் ரசனைக்கு ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ தீனி போடும் என எதிர்பார்க்கலாம்
என வெவ்வேறு திரைக்கதை களத்துடன் நான்கு படங்கள் வெளியாகின்றன நாளை பிரபுதேவா நடித்துள்ள தேள் மற்றும் சில படங்கள் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இவை அனைத்தும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டதால் நாளை வெளியாகவுள்ள படங்கள் பற்றி எதையும் குறிப்பிடவில்லை .




- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]