மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம், ராஜா முத்தையா மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வகுப்புவாத சக்திகள் தமிழக மக்களை பிளவுபடுத்தக்கூடிய வகையிலும், மக்களுக்கு மத்தியில் மோதலை ஏற்படுத்தக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதைப் பிரதிநிதிகள் விவாதத்தில் முன் வைத்தனர். இவற்றை, எதிர்கொள்ளக் கூடிய வகையில், இவர்களுக்கு எதிராக மக்களில் ஒற்றுமையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்துவதென்று இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். மைக்கேல்பட்டி விவகாரத்தை எப்படி தேசிய அளவிலான பிரச்சனையாக மாற்றினார்களோ அது போல, சிறு துரும்பு கிடைத்தாலும் அதனை பெரும் பிரச்சனையாக ஊதிப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் கூடுதலாகத் தொழிற்சாலைகளை நிறுவி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இவற்றின் நிலை என்ன, அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது போன்ற விவரங்கள் வெளிவராத ரகசியமாகவே உள்ளது. எனவே, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வெள்ளை அறிக்கையை தமிழக அரசாங்கம் வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கிளை வேண்டும் என்பது தென் மாநிலங்களின் பொதுவான கோரிக்கையாக உள்ளது. அதனை, சென்னையில் அமைக்க வேண்டும் என்பதை வற்புறுத்துகிறோம். மேலும் கல்வி நிறுவனங்களை மதம் சார்ந்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதை எதிர்க்கிறோம். தனியார் பள்ளி, கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் சாகாக்கள் நடத்துவதற்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]
- மதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் நிகழ்ச்சிமதுரை எல்.கே.பி நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் […]
- சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் திருவிழாசோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் 47 ஆம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது,ஜெனக […]
- இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்… சாமி பட வில்லன் நடிகர் பரபரப்பு வீடியோ..!!சாமி பட வில்லன் நடிகர் கோட்ட சீனிவாச ராவ் நான் சாகல இன்னும் உயிரோடு தான் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை […]
- யுகாதி தினத்தை முன்னிட்டு பஞ்சாங்க படனம்தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதியை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் அக்ரகாரம் சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் வரதராஜ் […]
- டெல்லியில் நிலநடுக்க அனுபவம் நடிகை குஷ்பு பரபரப்பு ட்விட்ஆப்கானிஸ்தானில் எற்பட்ட நிலநடுக்கம் டெல்லியில் உணரப்பட்ட நிலையில், தான் உணர்ந்ததாக தமது ட்விட்டரில் நடிகை குஷ்பு […]
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]