வாட்ஸ் ஆப் எண்ணுக்கு, வெளிநாட்டு எண்களில் இருந்து அடிக்கடி குறுஞ்செய்தியோ, அழைப்போ வந்தால், மோசடியாளர்களால் நீங்கள் குறிவைக்கப்பட்டு இருக்கலாமென்பதால், உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான வாட்ஸ் ஆப் அழைப்புகள், எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) போன்ற நாடுகளின் எண்ணில் இருந்து வருகின்றன.
சர்வதேச எண் குறியீடுகளுடன் வந்தாலும், வாட்ஸ் ஆப் அழைப்புகள் இணையம் வழியாக மேற்கொள்ளலாமென்பதால், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் அழைப்புகளை செய்யலாம்.
பல்வேறு நகரங்களில் வாட்ஸ் அப் அழைப்புகளுக்கு, சர்வதேச எண்களை விற்கும் ஏஜென்சிகள் உள்ளன.
இதுபோன்ற குறுஞ்செய்திகள், அழைப்புகள் மூலம் எதிர்முனையில் உள்ளவர்கள் வேலை அல்லது எளிதாக லாபம் ஈட்ட வாய்ப்பு என கூறலாம். ஆனால் இதன் முடிவில், நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்வீர்கள்.மோசடி பேர்வழிகள், வீட்டில் இருந்து வேலை செய்ய கூடிய எளிமையான பகுதி நேர வேலைவாய்ப்பு என கூறுகின்றனர். மோசடியில் சிக்க வைக்க முதலில் உங்களின் ஆசையை தூண்டுவார்கள். இதற்காக எளியவேலையை கொடுத்து சிறிய தொகையை அனுப்பி வைப்பர். இதனை நம்பி, வேலை செய்யும் போது உங்கள் விவரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுவர்.
மோசடி வலையில் சாதாரண நபர்கள் மட்டுமல்லாது தொழிலதிபர்களும் சிக்கி பணத்தை இழப்பது தொடர்கிறது. சமீபத்தில் பில்லியனரும், ஜீரோதா சி.இ.ஓவுமான நிதின் காமத், தனது நண்பர் வாட்ஸ் ஆப் மோசடியில் சிக்கி ரூ.5 லட்சத்தை இழந்தது பற்றி பகிர்ந்திருந்தார். டிவிட்டரில் ஏராளமானோர் இதுபோன்று வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ் ஆப் அழைப்புகள் வருவதாக பகிர்ந்திருந்தனர்.நெட்டிசன் ஒருவர், ‘உங்கள் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு 3 முறை மிஸ்டு கால் வந்துள்ளதா. அனைத்து கால்களும் ஒரு முறை மட்டுமே ரிங் ஆகும். அந்த எண்ணின் புரோபைல் படத்தில் பெண்கள் முகம் இருக்கும்.இதுபோன்ற அழைப்புகள் வருமாயின், மோசடி பேர்வழிகள் உங்களுக்கு வலைவிரிக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்’ என பதிவிட்டிருந்தார்.
வாட்ஸ் ஆப் மோசடியில் இருந்து தப்பிக்க, ஒரே வழி மோசடி வாட்ஸ் ஆப் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பி, நாம் அவர்களை தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும்.இது தவிர, இதுபோன்ற வெளிநாட்டு எண் அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்தால் அதனை உடனடியாக பிளாக் (Block) செய்ய வேண்டும்.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]