• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

May 18, 2025

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் பப்பாளி உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சோழவந்தான் மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் விமல் ராஜ் ஒன்றிய செயலாளர்கள் ரவி ஜெயபிரகாஷ் பேரூர் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.