சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 23ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிட்சுபிஷி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்தானது.
இந்த தொழிற்சாலை திருவள்ளூர் பெருவயல் கிராமத்தில் 52.4 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. மிட்சுபிஷி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தால் தமிழகத்துக்கு ரூ.1,800 கோடி முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் ஏர் கண்டீஷனர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஜப்பான் நிறுவனத்தின் முதலீடு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக அமையவுள்ள தொழிற்சாலையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் 60% முன்னுரிமை அளிக்கப்படும். ஜப்பான் – தமிழ்நாடு உறவை மேலும் வலுப்படுத்த பயணம் மேற்கொள்கிறேன். எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் 2-வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை மாற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 23ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளேன். 2024 ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக வெளிநாடு பயணம் செல்லவுள்ளேன். சுற்றுப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன். கடந்த ஆண்டில் நான் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள்தான் அதிகம். பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை வரவேற்கிறோம். உலகளவிலான முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று அணுக்கரு ஆய்வின் ராணி சியான்-ஷீங் வு பிறந்த தினம்யுரேனியம் அணுவிலிருந்து ஐசோடோப்புகளை வாயுப்பரவல் முறையில் பிரித்தெடுத்த அணுக்கரு ஆய்வின் ராணி, நோபல் பரிசு பெற்ற […]
- டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பு..!டிஎன்பிஎல் நிறுவனத்தில் இரண்டாண்டு பயிற்சி வகுப்பில் சேர ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் […]
- குறள் 444தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை.பொருள் (மு.வ): தம்மைவிட (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் […]
- இன்று செவ்வாய் கிரகத்தை முதன் முதலாக சுற்றி வந்த மாரினர்-9 விண்ணில் ஏவப்பட்ட தினம்பூமியை தவிர மற்றொரு கோளைச் சுற்றி வந்த செவ்வாயின் முதலாவது முதல் விண்கலம் மாரினர்-9 விண்ணில் […]
- இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சுதமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக […]
- லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்..,மின்சார வாரியம் எச்சரிக்கை..!மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும் என […]
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]