தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்க்கான முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடியில் ஓட்டு போடும் இயந்திரத்தை சரிபார்க்க அனைத்து கட்சி சார்பில் விருதுநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்ணா திமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் பாசறை சரவணன், நகர இலக்கிய அணி செயலாளர் சந்தோச பாண்டியன், பாசறை சுந்தரபாண்டியன், பால் பாண்டி செல்வம் ஆகியோர் வாக்குப் போடும் எந்திரத்தை சரி பார்த்தனர்.