• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனை கூட்டம்

ByK.RAJAN

Mar 18, 2024

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாரி தலைமை வகித்தார். நகர செயலாளர் ரஞ்சிக்குமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் தென்னவன் வரவேற்றார். கட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வது என்றும், அம்பேத்கார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது என்றும் , திருச்சியில் நடந்த மாநில உரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொண்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.