• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

விஜய் வசந்த் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசிற்கு கண்டனம்..,

நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சில் நிர்வாக திறமையற்ற மத்திய அரசின் முறையற்ற அணுகுமுறையால், பெரும் நகரங்கள் முதல் சிறு கிராமத்தில் வசிக்கும் மக்களின் எரிவாயு தேவை தட்டுப்பாட்டால்.

உணவு விடுதிகள், சிறிய டீ கடைகள், கல்லூரி விடுதிகள் எல்லாம் அடைக்கக்கூடிய
நிலைக்கு மத்திய அரசின் தொலை நோக்கு பார்வையின்மையே
காரணம்.

இந்தியாவில் பெட்ரோல்,டீசல், எல்பிஜி விலை உயர்வை தடுக்க முடியாத அரசாக மத்திய அரசு உள்ளது. அரசின் திறமையின் மையால் நாட்டுமக்கள் அனுபவிக்கும் தொல்லையை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் விஜய் வசந்த் .