• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சுட்டெரிக்கும் வெயிலில் இருசக்கர வாகனத்தில் பயணித்து, பொது மக்களிடம் கை சின்னத்தில் வாக்கு சேகரித்த விஜய்வசந்த்

.தேர்தல் காலத்தில் ஒவ்வொரு வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சேகரிப்பு என்ற மரபையையும் கடந்து, இந்தியாவின் ஜனநாயக கடமையான அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்கு பதிவு 100_சதவீதத்தை எட்ட வேண்டும் என்ற ஜனநாயக கடமையை, குமரி மாவட்டத்தில் உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் வலியுறுத்தி, கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், குளச்சல் தொகுதியின் பகுதிகளிலும், முளகுமூடு பகுதிகளில். விஜய் வசந்த், கூட்டணி கட்சியினர், இரு சக்கர வாகனத்தில் பயணித்து, எதிரே சந்திக்கும் பெரியவர்கள், மூதாட்டிகள், இளைஞர்கள், இளம் பெண்கள் குறிப்பாக முதல் முறை வாக்காளர்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு. பார்வையாளர்களான வாக்காளர்களை பெரிதும் ஈர்த்தது மட்டும் அல்ல. இளைஞர்கள், இளம் பெண்கள் வேட்பாளருக்கு கை கொடுத்து அவர்களது வாக்குகள் மட்டுமே அல்ல. அவர்கள் பெற்றோர்கள், நண்பர்கள் வாக்குகளை கை சின்னத்தில் வாக்களிக்க களத்தில் இறங்கி பயணிப்போம் என காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் இடம் உறுதிப்பட தெரிவித்தார்கள்.